Saturday, December 31, 2011

Happy New Year 2012 - Life is a game.

LIFE IS A GAME

  
The above greeting was made on the floor by sons Vasanth and Vishal. The items used were Playing cards,Chess coins, toy cars, Checkers coins and Alphabet shapes to show the theme "Life is a Game"

Thursday, December 29, 2011

HD Video - Rollercoaster simulation with handycam




Thanks to my 2 sons who gave their hands in making this video.
You tube lets us do the following in the uploaded video. 
1)Tweak the video like rotations,change color,light etc, or change the video into b/w,sepia and many more.
2)Add titles,speech bubbles,pauses etc.
3)Swap the original audio with a list of music files.

New Year resolution ! Any solution ?

     Our world, in the once green planet (this one -->), is divided into 2 groups regardless of country,religion,linguistic differences, i.e., those who take up new year resolutions and those who don't. Any attempt to divide the first group like 'those who keep up with the new year resolutions' and 'those who don't' is a waste. All those who take up the new year resolutions, find it difficult to keep up with them. As the name indicates,it is mostly meant for the 'new' year which may be the first day or the first few days of the year.I have heard of people who did Yoga on Jan 1st to fulfill their new year resolution commitment and limited the practice to just only 'eataasana' or 'sleepaasana' for the rest of the year. 
      By this time you would have found out that I belong to the first group mentioned in the line numero uno (Italic Italicized!) of this post. Last year,during the tail end, which is normally the new year resolution season for normal persons, I decided that no more new year resolution. Earlier for many years I was very serious about the new year resolution and used to meditate on them in the early hours of the new year. 
   It became so serious that the resolutions list was growing big that I couldn't write them in the mind and started using paper.
I ended up with using the same list (rather worst,same paper) for 2/ 3 years successively. Ever heard of new year resolution checklist! (paperback version, hardbound edition or a computer database for storing the new year resolutions in worst cases).
   Finally I got bored and lost the fun with the new year resolution. I decided enough is enough and didn't have any new year resolution last year. In other words, "No resolution hereafter" became my resolution. Since I didn't want to lose in touch with the resolution thing,that year (read last year), I had my computer monitor resolution as 1366 X 768 which served as the new year resolution.At last I could keep up with one resolution.
   2011 is about to end in few days and I tried not to fall into the new year resolution trap again. As usual and as normal, I failed in my "No resolution" resolution and my desire to have a new year resolution for 2012 has won. Will try to search for the good old paper with the standard list of resolutions and if I don't get it, will use an excel sheet to enter and maintain(?!) my resolutions.

After all this is life. It is a game we play with ourselves whatever the age. Let us enjoy the fun.

Sunday, December 25, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 23

முதியவர்

ஒரு காலையில்
பாதையில் ஒரு
கிழவரைக் கண்டேன்.
கண்டதும் சிலிர்த்தேன்.
எலும்புகளின் மேல்
சுருங்கிய தோலும்
சுருங்கிய தோலுக்குள்ளே
மறைந்திருந்த நரம்புகளும்...
ஒட்டிய கன்னம்
கருமை காணாமல்
போன கருவிழிகள்.

எடை சிறுத்து
நடை தளர்ந்து
உடை கனத்து...
நூறைத் தாண்டுமோ வயது?
அந்த வயதில் இருப்பதே அதிசயம்.
நடப்பது நடக்கிற காரியமில்லை.
நடமாடும் சரித்திரம்.
வாழ்க்கையை எப்படி
 கடந்திருப்பார் அவர்?
ஓடின எண்ணங்கள்.

படிக்காத அறிவாளியோ?
படித்த பாமரனோ?
காதலியை மணந்தவரோ?
மனைவியைக் காதலித்தவரோ?
நண்பர்கள் ஏணியாகினரோ?
நண்பருக்கு ஏணியானாரோ?
பகைவரால் பயன் பெற்றாரோ?
நண்பரால் ஏமாந்தவரோ?
நம்பிக்கையாய் வாழ்ந்தவரோ?
நம்பிக்கை பற்றிப் படித்தவரோ?

வெற்றிகளால் தோற்றவரோ?
தோல்விகளால் வென்றவரோ?
சந்திப்பவரைச் சிந்திக்கவைத்தவரோ?
சிந்திப்பவரைச் சந்தித்தவரோ?
எதிர்பார்ப்புகளால் ஏமாந்தவரோ?
ஏமாற்றங்களை எதிர்பார்த்தவரோ?
பிள்ளைகளை வளர்த்துப் 
பிள்ளைகளால் வளர்க்கப்பட்டவரோ?
வாழ்வைப் பிடித்து வாழ்ந்தாரோ?
இல்லை நடித்து வாழ்ந்தாரோ?

ஒரு கடிகாரக் கடை

பல கடிகாரங்கள்.
சதுரமாய்...
வட்டமாய்...
பெரிதாய்...
சிரிதாய்...
ஆனால் ஒரே நேரம்.


 சில கடிகாரங்கள்
ரோஜாவைப் போல்
முட்களோடு...

 உடல் பருமனால்
மெல்ல்ல்ல நகரும்
சின்ன முள்.
உயரமாய் 
பெரியமுள்
மெதுவாய் நடக்கும்.
ஓய்வேயில்லை,
ஆனாலும்
சுறுசுறுப்போடு நொடிமுள். 

சில கடிகாரங்கள்
தாமரை போல்
முள்ளில்லாமல்.
நேரத்தில் எண்கள் மாறும்.
எண்களில் நேரம் காட்டும்.

கடிகாரங்களின்
அழகை ரசிக்க
நேரம் போதாது.

வெளியேறும் சமயம்
நேரத்திற்கு வராத
கடையின் பணியாளரைக்
காரமாய்க் கடிந்தார்
கடிகாரக் கடை முதலாளி.


டிசம்பர் சீசன் - பாட்டும் பரதமும்...

      சமீபத்தில் நாரத கான சபாவில் ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்குச் சென்றேன். காலை ஹிந்து பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்த போது சௌம்யாவின் பாட்டும் ஊர்மிளாவின் பரதமும் என்று தெரிந்தது. நாரத கான சபாவின் படியே அழகு. சில புகைப்படங்களை எடுத்தேன் படிகளை, சில கோணங்களில். முன்பு படித்த ஜோக் ஒன்று ஞாபகம் வந்தது. அதில் உடல்நிலை சரியில்லாத ஹீரோவை நோய் படிப்படியாகக் குணமாவதைக் காட்ட படியில் இறங்கி வரச் சொல்வார் டைரக்டர். பால்கனி டிக்கெட் எடுத்த போது மணி 4.15.

      இருக்கையில் அமர்ந்த போது திரை மூடியிருந்தது தெரிந்தது. திரையின் பின்புறமிருந்து இசைக் கருவிகளின் சத்தம் வந்து கொண்டிருந்தது.திரையின் பின்னே நடுவில் யார் இருக்கிறார் என்பதும் அவர் உட்கார்ந்திருக்கிறார் என்பதும் நமது துப்பறியும் மூளைக்குத் தெரிந்தது.
     சௌம்யா கச்சேரியை ஆரம்பித்தார். சென்னைக்கு வந்த புதிதில் சௌம்யாவின் கச்சேரியை மியூசிக் அகாடமியில் கேட்டிருக்கிறேன். பாரதியார் பாடல்களைப் பாடி அவரின் ரசிகனாக்கிவிட்டார். அதே சமயம் நடந்த இன்னொரு நிகழ்ச்சியை கீழே உள்ள உரலியில் வயலின் பகுதியில் படியுங்கள்.
http://venkatramvasi.blogspot.com/2011/07/blog-post_02.html

     முதல் பாடல் "சாமி தய சூட மன்ச்சி" (கேதார கௌளை ராகம்). அவ்வப்போது சௌம்யா லேசாக இருமிக் கொண்டார். அவரின் குரல் அப்பவும் அருமை தான். அடுத்த பாடல் "ராகவா இன்டி காக்க",(ராகம் ?).அடுத்து "பவனுத ராகவா". பிறகு "பார்வதி நினு நே". "ரஞ்சனி நிரஞ்சனி", ஜிஎன்பியின் பாடல், ராகம் ரஞ்சனி,இனிமை. அதே ராகத்தில் ஒரு திரைப்படப்பாடல் இந்தா அந்தா என்றுவிட்டு கடைசியில் ஞாபகம் வரவில்லை. அந்தப் பாடலில் மேடையிலிருந்த சிஷ்யப் பிள்ளைகள் பாடிய "ரிகமதச",சௌம்யா நிறுத்திய போது தனியாகக் கேட்டது. அடுத்து "அன்னபூரே விஷாலாஷி", சாமா ராகம். "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" நினைவில் வந்து போனது. "ப்ரோவ பாரமா ரகுராமா" , பகுதாரி ராகம். செம வேகத்தில் பாடினார் சௌம்யா. அந்த வேகம்,கன்னுக்குட்டியின் துள்ளல்,அருவி,காட்டாறு போன்றவற்றை மனத்தில் கொண்டு வந்தன. "கருணே துசே","திருவைப் பணிந்து" தொடர்ந்து காதுகளைக் குளிர்வித்தன அரங்கின் ஏசியோடு இணைந்து. 
      முன்பு ஒரு முறை ஒரு கச்சேரியில், வயலின்காரர் வாசிக்கும் போது கச்சேரிக் கலைஞர் ஒரு கூல் டிர்ங்ஸ் பாட்டிலை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார். அய்யோ குரல் என்னவாகுமென்று நான் துடித்தேன். கண்டிப்பாக அது குளிர்ச்சியாக இருக்காது என்று முடிவு செய்த போது, அவர் தனது புல்லாங்குழலை எடுத்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து நான் மெய் மறந்து கச்சேரி கேட்பதை நிறுத்தி விட்டேன்.கச்சேரி நடக்கும் போதே சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஒருவர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் கச்சேரியைப் பற்றிய விமர்சனம் இருக்கிறதா என்று தேடுகிறாரோ என்று தோன்றியது.
     அடுத்து சிறிது இடைவேளை.அந்த நேரத்தில் செவிக்கு உணவில்லாததால் சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. இடைவேளைக்குப் பின்னர் ஊர்மிளா சத்யநாராயணா பரதம் ஆடினார். லைட்டிங் அருமையாக இருந்தது. ஊர்மிளாவின் உடையமைப்பு தலைகீழாக ஒரு மயில் இருப்பது போல் இருந்தது. ஜதி சொன்னவரின் குரல் வளம் அருமை. அவர் ததிங்கினத்தோம் போடுகிறார் என்று சொன்னால் அது உண்மையாக இருந்தாலும் வழக்கு என்ற வகையில் பொய்யாகிவிடும். பால்கனியிலிருந்து பார்க்கையில் ஊர்மிளாவை விட அவரின் பின்னால் சுவரில் தெரிந்த அவரின் நிழல் இரட்டையர்கள் நன்றாகத் தெரிந்தனர். சில நேரம் ஊர்மிளா ஒளியிலேயே சில்ஹவுட் போல் தெரிந்தார். பால்கனிகாரர்களுக்கு பைனாகுலர் வாடகைக்கு விட்டால் தேவலை. அதற்கென்று ரொம்ப முன்னால் உட்கார்ந்து பரதம் பார்த்தால் ஆடுபவர் காலைத் தூக்கினால் நம்மை உதைக்க வருவது போலிருக்கும்.
     முன்புறம் ஒரு சிறு குடும்பம் உட்கார்ந்திருந்தது. அப்பா,அம்மா,சிறு பையன். பையன் அம்மாவிடம் பல கேள்விகள் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தான். அப்பாவும்,அம்மாவும் பேச ஆரம்பித்தால்,உடனே அம்மாவை டான்ஸைப் பார்க்கச் சொன்னான். சில தடவை இப்படி நடந்தது. திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி பற்றி ஒரு பாடலுக்கு கிருஷ்ணரின் லீலைகளை அழகாக அபிநயம் பிடித்துக் காட்டினார். வள்ளி நடனத்தில் உடையலங்காரம் நன்றாக இருந்தது. பார்வதி தேவியின் பல அவதாரங்களைப் பற்றிய நடனத்திற்கான பாடல் எட்டு ராகங்களில் அமைந்திருந்தது. ஏழு ராகம் கண்டு பிடிக்க முடிந்தது.எட்டாவது எட்டாக்கனியாகி விட்டது.மேடையிலிருந்த இரு ஆளுயரக் குத்து விளக்குகளின் ஒளிகள் நட்சத்திரங்கள் போல் மின்னின இருட்டை ஒட்டிய ஒளி அமைப்பின் போது. எங்கே அணைந்து விடுமோ என்று பயமுறுத்தியபடி இருந்த அவை கடைசி வரை ஒளிர்ந்தன. ஊர்மிளாவை டீன் ஏஜ் மங்கை என்று நான் சொல்ல,அருகிலிருந்தவர் "இல்லை,முப்பதுக்கு மேல் இருப்பார்" என்றார்.
பொதுவாக நாட்டியம் என்பது ஃபிட்டானவர்கள் நின்று,நடந்து ஆடுவதை பெரும்பாலும் உடல் பருத்தவர்கள் உட்கார்ந்து பார்ப்பது என்றாகிவிட்டது.
     மறு நாள் விக்கிபீடியாவில் ஊர்மிளாவின் வயது நாற்பத்தைந்து என்று தெரிந்த போது ஆச்சரியமாக இருந்தது.