Saturday, September 24, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 15


ஒலியும் வலியும்
ஓடிக் கொண்டிருக்கிறது 
மாட்டு வண்டி!
சீராக வரும் குளம்பொலி!
சீராக வரும் சலங்கை மணிச் சத்தம்!
சீராக இல்லாமல் வண்டிச் சுமை 
மாட்டின் கழுத்தில் அதிகமாய்...

ஒரே ஒரு பிறவியிலே
உணவுகள் எத்தனையோ!
ஒரே வயிறு!
காட்சிகள் எத்தனையோ!
இரண்டே விழிகள் !
ஒலிகள் எத்தனையோ!
இரண்டே செவிகள்!
எண்ணங்கள் எத்தனையோ!
ஒரே மனம்!
ஆசைகள் எத்தனையோ!
ஒரே பிறவி! 

மழை
குளித்தது சென்னை !
அழுக்காயினர் சென்னை மக்கள்! 

No comments:

Post a Comment