Sunday, February 12, 2012

சிறு கவிதை - எதைக் கவிதை பாட?

திறமையை பாதிக்கும்
வறுமையைப் பாடவா?
வறுமையை வளர்க்கும்
திறமையைப் பாடவா?

பழமையை விரட்டும்
புதுமையைப் பாடவா?
புதுமையை வெறுக்கும்
பழமையைப் பாடவா?

முதுமையை நினைக்காத
இளமையைப் பாடவா?
இளமையை மறந்த
முதுமையைப் பாடவா?

பொய்மையை உடைக்கும்
உண்மையைப் பாடவா?
உண்மையை ஒளிக்கும்
பொய்மையைப் பாடவா?

கண் மையைப் பூசும்
பெண்மையைப் பாடவா?
பெண்மையைக் கூட்டும்
கண் மையைப் பாடவா?

வன்மையைத் தூண்டும்
மென்மையைப் பாடவா?
மென்மையைச் சீண்டும்
வன்மையைப் பாடவா?

மடமையை ஒழிக்கும்
கடமையைப் பாடவா?
கடமையை மறக்கும்
மடமையைப் பாடவா?

No comments:

Post a Comment