Wednesday, April 18, 2012

சிறு கவிதைகள் - வெயில் காலம்/ஏதோ நினைவுகள்

வெயில் காலம்
உருக்கும்
உச்சி வெயில்.
அனல் காற்று.
சுடும் தரை
'ஐயோ தாங்கல!'
சொல்லாமல் சொல்லும்
முக பாவங்கள்.
உஷ்ணம்
உலகை வெறுக்க வைக்கும்
கொடும்பகல் முடிந்து
இரவானால்...
வீசும் இளங்குளிர் காற்று,
உலகை நேசிக்க வைக்கும்.
மோர் சாதம்.
மாங்கா ஊறுகாய்.
செம்பு நிறைய தண்ணீர்.
உடல் குளிர்ந்து
மனம் குளிரும்.
முரண்பாடே வாழ்க்கை.

ஏதோ நினைவுகள்
'''பிறர் நினைப்பதை
இனி பொருட்படுத்தாதே!
மகள் வரைவதைப்
பாராட்டியதில்லை இதுவரை.
பார்வையற்ற மாணவர்க்கு
வாசித்துக் காட்ட
ஒரு முறையேனும்
போயிருக்கலாம்.
முடிந்தால் நாளை!.
இன்னும் கொஞ்சம்
பேசியிருக்கலாம்
அம்மாவிடம்.
சிடுமூஞ்சி எனப்பயந்த
சித்தரஞ்சன்
கோபித்ததில்லை
இப்போது வரை.
பொறியியலில் சிவில்
பிடித்திருந்தும்
மெக்கானிகல்
எடுத்திருக்கக் கூடாது.
பிரியம் காட்டுபவரிடம்
கோபிக்கக்காதே!.'''

"மூணு நாள்
தாங்குமாம்.
பையன் கிளம்பிட்டான்.
கண்ணு அசையுது.
பெரியவர் ஏதோ 
நினைக்கிறார் போல!"

No comments:

Post a Comment